அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
சமீபத்தில் வெளிவந்த ஒரு பாடல் இது! கேட்டமாத்திரத்திலேயே என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.வழக்கமாக காதலியின் (இல்லாத) அழகை வர்ணிக்கும் பாடல்களிலிருந்து மிகவும் விலகி, ஒரு காதலியின் யதார்த்த அழகை உள்ளதை உள்ளபடிப் பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார், இப்பாடலை எழுதியவர்.
இப்பாடலின் இசையை விஜய் ஆன்ட்டனியும், ஜி.வி பிரசாத்தும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.
பாடலைப் பாடியிருப்பவர்கள் வினீத் சீனிவாசன், ரஞ்சித் மற்றும் ஜானகி அய்யர். வினீத் சீனிவாசன் மலையாளத் திரையிசையில் பிரபலமானவர். இவர் பிரபல மலையாள நடிகர் சீனிவாசனின் மகனாவார்.
அவள் கூந்தல் அதிக நீளமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை குறையவில்லை
என்ன ஒரு வார்த்தைக் கோர்ப்பு! காதலியின் முரணான அழகமைப்பிலும், காதலனின் பிறளாத பிதற்றல், அவள் மீது அவன் கொண்ட பிரியத்தை சொல்லும் விதம் மிகவும் அருமை.
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல ஏதுமில்லை
அவளது ஏழ்மையும் அவனுக்கு அழகாகவே தெரிகிறது. அவள் திட்டினாலும் அதிலுள்ள அக்கறை மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. அருமையான வரிகள். யதார்த்தத்தை ரசிக்கத்தெரிந்த கவி! ஆம், கவிதைக்குரிய பொய்யோ, மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளோ எதுவும் இல்லாதப் பாடலின் மேலும் சில வரிகளைக் கவனியுங்கள்.
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் கூந்தல் அதிக நீளமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கையில் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை குறையவில்லை
அவள் சொந்தம் அன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை...
2 comments:
அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை ------
இப்படாலை நீர் வர்ணித்து உள்ள விதம், பாடலினும் அழகு !!!!
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு! பாட்டு வந்த புதுசில் பாடிட்டே இருப்பேன்.
Post a Comment